கண்ணாடி

Sunday, July 27, 2008

வாசம்

பூத்த மலரிலும்,வீசும் காற்றிலும்
பெய்யும் மழையிலும் வீசும் வாசம்.
கல்லிலும், களி மண்ணிலும்
கனிந்த கனியிலும் வீசும் வாசம்.
மிண்ணும் பொன்னிலும், அழகிய பெண்ணிலும்
அவள் பெரும் பிள்ளையிலும் வீசும் வாசம்.
இத்தனையிலும் வாசத்தை வைத்ததுதான் யாரோ?
இயற்கை அன்னை என்பது உன் பேரோ!.

Sunday, July 06, 2008

உறக்கம்

கோவில் திருவிழா,
விடிய விடிய விழித்திருந்தனர் மக்கள்.
உறங்கியது என்னவோ பகுத்தறிவு மட்டும்.