கண்ணாடி

Saturday, December 31, 2011

தானே புயல்-2011

தானே..நீ புரட்டி போட்டது எங்கள் ஊர் மரங்களை மட்டும் தான்
எங்கள் மனங்களை அல்ல.
மீண்டும் துளிர்வோம்..
வெற்றிடத்தில் வாழ்பவர்கள் அல்ல தமிழர்கள்,
வெளி உலகையும் ஆளப்பிறந்தவர்கள்.

Saturday, July 30, 2011

கடற்கரை

கரை தொட்டு கடல் திரும்பும் அலைகள்
என் கால் பற்றி கரையோடு நின்றன.
தொட்டு தூக்கிட தலை குனிந்தேன்,
தொட்டவுடன் நுரையாய் கரைந்து சென்றாள்.

Wednesday, December 22, 2010

தூதுவர்

இயற்கையின் சமாதான தூதுவர்
வெள்ளை கொடிகளுடன் இன்று ஊருக்குள் விஜயம்.
தெருவெங்கும் பனி பொழிவு.

Wednesday, October 20, 2010

மழை துளிக்கு நன்றி்..

மழை துளியே,
உன் மேணி என் மீது படரும் போது
முதலில் சிலிர்த்தேன், பின் மெல்ல ரசித்தேன்..
உன் சின்னஞ் சிறிய தேகத்தினுள் எத்தனை ரகசியம்
நீ தந்த பரவசத்துக்கு நன்றி்.

Tuesday, August 03, 2010

தனியே...

இரவுப்பேருந்து
வேலை தேடி கிராமத்தை விட்டு நகருக்குப்பயனம்,
சென்றது நான் மட்டும் தான்.
ஆனால் என் இதயத்தோடு பயனித்தது
என் பெற்றோர்,
என் சகோதிரி, அவள் வளர்த்த செல்ல நாய்,
நான் வளர்த்த ஆடு, அது ஈண்ற குட்டி,
என் வீட்டு தென்னை, அதன் கீற்றில் வேய்ந்த குடிசை,
ஆற்றங்கரை பிள்ளையார், அச்சமூட்டும் அய்யனார்..
இத்தனை சுமந்தும், கணக்கவில்லை என் இதயம்.
யார் சொன்னது, எனக்கு தனிமை என்று..

Sunday, June 27, 2010

விதவை

உலகின் முதல் விதவை
உயிரோடு இன்னும் உலா வருகிறாள்,
வெள்ளை புடவையில், நிலா..

Thursday, November 05, 2009

கண்ணாமூச்சி

நிலவுக்கும் சூரியனுக்கும்
கண்ணாமூச்சி ஆட்டம்..
அதுவே,
இரவென்றும் பகலென்றும்
பூமியில் மாற்றம்.

Monday, June 29, 2009

வாஸ்து

நிலநடுக்கம்.
தரைமட்டமாயின வீடுகள்.
இடிபாடுகளில் சிக்கியது,
வீடுகளின் வாஸ்து.

Sunday, February 22, 2009

அமாவாசை

அமாவாசை இரவு.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன்.

இருட்டில் எதுவும் தெரியவில்லை, நிலவு உட்பட.

கடன்

நண்பர்களே,
உங்கள் கற்பனையை கடனாக தாருங்கள்.
ஒரு கவிதை எழுதிவிட்டு தருகிறேன்.

Friday, October 24, 2008

விழா

விழா மேடையமைக்க,மரங்கள் வெட்டப்பட்டன..
மாலையில் இனிதே நிறைவேறியது,
மரம் நடு விழா.

Tuesday, September 23, 2008

அறியாமை

நடுநிசி நேரம்...
தெளிந்த நீரோடை...
மிண்ணும் நிலவின் அழகிய பிம்பம்...
அதை நிலவென நம்பி, நீந்தும் மீன் கூட்டம்..
என்ன செய்ய?
சில நேரங்களில்,ஆனந்தமாய் வாழ அறியாமை தேவைபடுகிறது.

Sunday, July 27, 2008

வாசம்

பூத்த மலரிலும்,வீசும் காற்றிலும்
பெய்யும் மழையிலும் வீசும் வாசம்.
கல்லிலும், களி மண்ணிலும்
கனிந்த கனியிலும் வீசும் வாசம்.
மிண்ணும் பொன்னிலும், அழகிய பெண்ணிலும்
அவள் பெரும் பிள்ளையிலும் வீசும் வாசம்.
இத்தனையிலும் வாசத்தை வைத்ததுதான் யாரோ?
இயற்கை அன்னை என்பது உன் பேரோ!.

Sunday, July 06, 2008

உறக்கம்

கோவில் திருவிழா,
விடிய விடிய விழித்திருந்தனர் மக்கள்.
உறங்கியது என்னவோ பகுத்தறிவு மட்டும்.

Monday, May 19, 2008

குடிசை

எங்கள் கிராமத்து குடிசைகளில்
கூரையில் கூட ஜன்னல்கள் உண்டு.
மேகமே திரை சீலையாய்,
நட்சத்திரமே அலங்கார விளக்காய்,
கொட்டும் மழையே அழையா விருந்தாளியாய்,
ரம்மியமான வாழ்க்கை.

Sunday, March 30, 2008

போலி

போலிகளை நம்பாதீர்,
அவை மனிதர்களாக இருந்தாலும்.

Tuesday, February 26, 2008

மதிப்பு

நான் எழுதிய தமிழ் புத்தகங்களைவிட
அதை விமர்சித்த ஆங்கில நாளிதழுக்கு மதிப்பு அதிகம்,
பழைய காகித கடையில்.

Thursday, February 21, 2008

வண்ணத்துப்பூச்சி

வானவில் எய்த அம்பொன்று
என் வீட்டு தோட்டத்தில் வந்தமர்ந்தது,
வண்ணத்துப்பூச்சியாய்.

Sunday, February 10, 2008

சூரியன்

சூரியன் உமிழும் சூடான எச்சில்
என் மீது வழிகிறது, வெயிலாய்.

Sunday, February 03, 2008

படிப்பு

நான் தமிழ் படித்ததை, ஊருக்கு உணர்த்தியது
இரண்டு ஆங்கில எழுத்துக்கள்,
M.A.